Wednesday 8th of May 2024 06:44:01 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று: சிகிச்சையில் 238 பேர்!

ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று: சிகிச்சையில் 238 பேர்!


ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 238 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 13 நாட்களில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மிக குறைந்தளவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் அவ் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் நேற்றைய தினம் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேனாபுர பேதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த 23 கைதிகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 3 பேர் உள்ளிட்ட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 2871 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்றைய தினம் 29 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதை அடுத்து இதுவரையில் பூரணமாக குணமடைந்து உள்ளவர்களது எண்ணிக்கை 2622 ஆக உயர்வடைந்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 238 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இதுவரை 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE